சான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் வெள்ளி விழா
ஜூலை 11, 2004 அன்று, ஷபோ கல்லூரி அரங்கில், சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் 25வது ஆண்டு விழா கொண்டாடப்படும். இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்த திருவாசக இசையோடு அவர் முன்னிலையில் விழா துவங்கும். இசை ஞானி அவர்களின் இசையை வளைகுடாப் பகுதித் தமிழ் இசைக் குழுக்கள் கௌரவிப்பார்கள். மறைத்திரு ஜகத் காஸ்பர் ராஜ், சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன், நாட்டுப்புறப் பாடல் கலைஞர் கள் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி தம்பதியர் ஆகியோரைத் தமிழ் மன்றம் அழைத்திருக்கிறது. 25 ஆண்டு களாக வளைகுடாப் பகுதியில் தமிழ் வளர்த்த பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

அதிக விவரங்களுக்கு: www.bayareatamilmanram.org, president@bayareatamilmanram.org

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com