தமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழர் திருவிழா
ஜூலை மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாகவும், சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடனும் தமிழர் திருவிழா கொண்டாட இருக்கிறது. முப்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்நாடு அறக் கட்டளை, இந்த வருடம் சிகாகோ நகரில் கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டி மன்றம், நாடகம், நாட்டியம் போன்றவற்றை நடத்தி, தமிழ்க் கலாசாரத்தைப் பேணும் பணியைச் செய்து வருகிறது. கவியரசு வைரமுத்து அவர்களின் தலைமையில் கவியரங்கம், பட்டிமன்றம், 'லக்ஷ்மண் ஸ்ருதி' குழுவினருடன் திரைப்பாடகர் மனோ மற்றும் பலரின் இன்னிசை விருந்து, திரை நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை இடம் பெற உள்ளன.

1974 வருடத்தில் ஆரம்பிக்கப் பெற்ற வரிவிலக்குப் பெற்ற இந்த அறக்கட்டளை, தமிழ்நாட்டில் எண்ணற்ற பொதுப் பணிகளைச் செய்து வருகிறது. அவற்றுள் மருத்துவம், சுகாதாரம், கல்வி ஆகிய பணிகள் மிக முக்கியமானவை.

கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தொடர்பு கொள்க:

முத்துசாமி - 847.498.2152 மின்னஞ்சல்:muthus101@yahoo.com

ராம் ரகுராமன் - 815.436.3135 மின்னஞ்சல்:rraghura@jjc.edu

மேலும் செய்திகள் அறிய இணையத்தள முகவரி:http://www.tnf2004.org

ஜோலியெட் ரகு

© TamilOnline.com