ஒரு இயக்குநர் நடிகரானார்!
மணிரத்னம் இயக்கும் 'ஆயுத எழுத்து' படத்தில் நடித்து வரும் சித்தார்த் இயக்குநர் ஆகும் ஆசையில் சினிமாவிற்குள் நுழைந்தார். ஆனால் எதிர்பாராமல் நடிகராகிவிட்டார். இவரின் முதல்படமே ஷங்கருடன்தான். இளம் வயதிலேயே திருமணம் ஆகி குடும்பஸ்தனாகிவிட்டார் சித்தார்த்.

எம்.பி.ஏ படித்திருக்கும் சித்தார்த் தன் நடிப்பு ஆசையினால் அடிக்கடி மணிரத்தினத்தின் இணைய முகவரியின் மூலம் அவரைத் தொடர்பு கொண்டு வாய்ப்புகள் கேட்க, ஒருமுறை இவரை நேரிடையாக அழைத்த மணிரத்னம் இவரை 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் உதவி இயக்குநராக அமர்த்தினார்.

தொடர்ந்து 'பாய்ஸ்' வெளிவர அதிகம் பேசப்படலானார் சித்தார்த். தற்போது மணிரத்னத்தின் ஆயுத எழுத்து இவர் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் சித்தார்த் காதல் மணம் புரிந்துக்கொண்டவர். இவரின் மனைவி பஞ்சாபிப் பெண். அதுமட்டுமல்ல ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்.

ஷங்கர், மணிரத்னம் என்று பெரிய பெரிய இயக்குநர்கள் படங்களிலேயே நடிக்க அதிகளவில் வாய்ப்பு வருவதைப் பெருமையாக கூறுகிறார் சித்தார்த்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com