வருகிறார் 'ஜக்குபாய்'
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தனது புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த். அருணாச்சலா கிரியேஷன்ஸ் சார்பில் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் கெய்க்வாட், ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்திய நாராயணா மற்றும் ராக வேந்திரா திருமண மண்டப நிர்வாகி முரளி ஆகியோரின் பெயரில் தயாரிக்கப்படும் இப்படத்திற்கு 'ஜக்குபாய்' என்கிற பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு கே.எஸ். ரவிக்குமார் இயக்கம், ஏ.ஆர். ரஹ்மான் இசை. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை, நடிகர்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கவிருக்கிறது.

இப்படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில் ரஜினிகாந்த் பக்கத்தில் ஏகே 47 துப்பாக்கி ஒன்றை வைத்துக் கொண்டு ஓசாமா பின்லாடன் போலவே காட்சியளிக்கிறார். இது கதையைப் பற்றிய காரசாரமான ஊகங்களைக் கிளப்பிவிட்டிருக்கிறது. ஜக்குபாய் தீவிரவாதத்தை எதிர்க்கும் படமோ என்று தோன்றுகிறது. பொங்கலுக்கு ஜக்குபாய் வெள்ளித் திரைக்கு வருவார் என தெரிகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com