சுணங்குகிறான் 'சுள்ளான்'
'சுள்ளான்' திரைக்கு வருவதில் ஒருபுறம் பிரச்சனை நீடிக்கிறது. மறுபுறம் அமைதியாகப் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழாவை நடத்தி முடித்துவிட்டார் கஸ்தூரி ராஜா.

'எந்தப் படத்தையும் நிறுத்திவைக்க வேண்டும் என்பது எனது விருப்பம் இல்லை. ஒரு படத்தை முழுமையாக எடுத்து முடித்துவிட்டால் அதைத் திரையிட வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். 'சுள்ளான்' படம் முடிவடைந்து விட்டது. கூடியவிரைவில் திரைக்கு வரும்... வரவேண்டும் என்பதே என் விருப்பம்' என்கிறார் கஸ்தூரி ராஜா.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com