வளைகுடாப் பகுதி தமிழ்மன்றத்தின் குழந்தைகள் தினம்
வெள்ளி விழாக் கொண்டாடி வரும் சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ்மன்றம், அக்டோபர் 23, 2004 அன்று குழந்தைகள் தினவிழாவைக் கொண்டாடுகிறது.

வளரும் குழந்தைகளின் திறன் வெளிப்பட வாய்ப்பாக - இசை, நடனம், தமிழ்த்திறன் வெளிப்பாடு, தனிநடிப்பு, மாறுவேடப் போட்டி, பலகுரல் பேச்சு போன்ற நிகழ்ச்சிகள் உண்டு. குழந்தையின் திறமையை மேடையேற்றித் தமிழ்ச் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.

தங்கள் குழந்தைகள் பங்கேற்க வேண்டும் என விரும்புவோர் children@bayareatamilmanram.org முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிப் பதிவு செய்யலாம்.

நாள்: அக்டோபர் 23, 2004; மாலை 2.30மணி.

இடம்: எவர்கிரீன் வேலி உயர்நிலைப் பள்ளி, சான் ஹோசே.

அதிக விவரங்களுக்கு: www.bayareatamilmanram.org

© TamilOnline.com