புதுமுகங்கள் நடிப்பில் 'ஆவணித்திங்கள்'
கே.எஸ். ரவிகுமார், ராஜ்கபூர் போன்றவர்களுடன் இணை இயக்குநராக பணியாற்றிய ஹரிகிருஷ்ணா 'ஆவணித்திங்கள்' என்ற படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குநராகிறார். தொழிலதிபர் ராஜாராம்ரெட்டியின் 'ராயர் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல்' என்கிற புதிய படநிறுவனம் இப்படத்தை தயாரித்து அளிக்கிறது.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. உடுமலை, பொள்ளாச்சி, சாலக்குடி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. பா.விஜய்யின் பாடல் வரிகளுக்கு ஆர்.சங்கர் இசையமைக்கிறார். எல்லா தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் உருவாகிறது 'ஆவணித்திங்கள்'.

ஸ்ரீகுமார் நாயகனாக நடிக்க, தேஜினி, மதுஷா என்ற இரு புதுமுகங்கள் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர லிவிங்ஸ்டன், டெல்லிகுமார், அஜய்ரத்னம் என்று தெரிந்த முகங்களும் நடிக்கிறார்கள். தேஜினி மும்பையில் நாடக நடிகையாவார். பல்வேறு நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர்.

வருகிற அக்டோ பர் மாதம் வெள்ளிதிரைக்கு வரவிருக்கிறது 'ஆவணித்திங்கள்'

கேடிஸ்ரீ

© TamilOnline.com