மலர் வளையம் வேண்டாம், மாணவர்களுக்கு உதவுங்கள்
வர்த்தகத் துறைப் பேராசிரியர் ஜயவேல் சவுந்தர பாண்டியன் விஸ்கான்சின்-பார்க்சைட் பல்கலைக் கழகத்தில் 24 ஆண்டு பணியாற்றிய பின் ஏப்ரல் 9, 2007 அன்று தனது 58வது வயதில் மரணமடைந்தார். அவரது நினைவாக இரண்டு மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி நிறுவப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற அவரது நினைவஞ்சலிக்கு வருவோருக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது: 'மலர்களுக்கு பதிலாக அவரது குடும்பம் 'UW-Parkside Benevolent Foundation, 900 Wood Rd., Kenosha, WI 53141-2000' என்ற அமைப்புக்கு நிதி உதவி அளியுங்கள்.'

இந்தக் கல்வி உதவி நிதி இந்திய மாணவர்களுக்குத் தரப்படுமாம். The Sounderpandian Poor Student Education Trust, c/o Dean Fred Ebeid, School of Business and Technology, 900 Wood Rd., Kenosha, WI 53141-2000 என்ற முகவரிக்கும் காசோலைகளை அனுப்பலாம். தென்றல் வாசகர்கள் இந்த நிதிக்கு பங்களிப்புச் செய்ய விரும்பினால் காசோலைகளை UW-Parkside Benevolent Foundation என்ற பெயருக்கு எழுதுவதோடு, 'In memory of Jay Sounderpandian' என்று குறிப்பிட மறக்கவேண்டாம். அதிக விவரங்களுக்கு: இங்கே சொடுக்கவும்

பேராசிரியருக்குத் தென்றல் அஞ்சலி செலுத்துகிறது. அவரது குடும்பத்தினரின் இந்த உயரிய செயலுக்குத் தலை வணங்குகிறது.

© TamilOnline.com