தங்கர்பச்சான் இயக்கும் புதிய படம்!
'சித்திரம் பேசுதடி' நரேன் நாயகனாக நடிக்க 'பள்ளிக்கூடம்' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை விஸ்வாஸ் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் விஸ்வாஸ் சுந்தர் தயாரிக்கிறார். நாயகியாக சிநேகா

மற்றும் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

தங்கர்ப்பச்சான் இயக்கவிருக்கும் இப்படத்தில் முக்கியப் பாத்திரம் ஒன்றில் கானா உலகநாதன் மற்றும் இயக்குநர் சீமான் ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.

பரத்வாஜ் இசையமைப்பில் நா.முத்துக்குமார், சினேகன் போன்றவர்களின் பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன.

அடுத்த ஆண்டு தமிழ் வருடப்பிறப்புக்கு திரைக்கு வரவிருக்கிறது 'பள்ளிக்கூடம்'.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com