லாஸ் ஏஞ்சலஸில் தமிழ் நத்தார் ஆராதனை
டிசம்பர் 18, 2004 அன்று தமிழ் நத்தார் (கிறிஸ்துமஸ்) ஆராதனை நோர்த்ரிட்ஜ் மெத்தடிஸ்த ஆலயத்தில் நடைபெற்றது. தயாளன் செல்வரட்னத்தின் பாடல்களை ராஜ் முனுவின் இசையில் பாட நிகழ்ச்சி தொடங்கியது. ஆரம்ப ஜபம் டேவிட் ஜோன்சன் அவர்களால் நடத்தப்பட்டது. அரு. ஹென்றி ஜோன் மற்றும் பாலாஜி திருமலை சிறப்புப் பாடல்கள் வழங்கினர். சுஹந்தி அருளம்பலம் மற்றும் செல். ரவி தேவானந்தன் பைபிள் வாசித்தனர். அரு. ப்ரேம்குமார் நற்செய்தி வழங்கினார்.

முக்கிய நிகழ்ச்சியாகக் குழந்தைகள் நடித்த 'கிறிஸ்து பிறந்தார்' என்னும் நாடகம் இடம்பெற்றது. சிறுவர் சிறுமியருடன் ஏஞ்சலாவின் நடிப்பு நாடகத்துக்கு மெருகூட்டியது. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். டேவிட் நேசமணியின் ஜெபத்துடனும், அரு. ப்ரேம்குமாரின் ஆசிர்வாதத்துடனும் நிகழ்ச்சி நிறை வெய்தியது.

மேலும் அறிய:
www.ourchurch.com/member/t/TamilChristian

மின்னஞ்சல் முகவரி: tamilchristianfellowship@ourchurch.com

ஜான் டேவிட், லங்காஸ்டர், கலி

© TamilOnline.com