இதற்கென்ன தண்டனை?
இது கடலோரக் கவிதையல்ல.
கடல் அலையின் ஓசையும் அல்ல.
கடலோர மக்களின் அலறல் இது.

மெட்டி ஒலிச் சத்தம் கேட்ட மெரீனாவில்
சாவுக்குழியில் பிணங்களைக் கொட்டும்
சத்தம் கேட்டதும் ஏனோ?

நடுங்கியது நிலம்மட்டும் அல்ல.
உலக மக்கள்களின் உள்ளமும்கூட.

வெட்டிக் குவித்தான் வீரப்பன்
மரங்களையும் மனிதர்களையும்,
அவனுக்குக் கிடைத்தது
மரண தண்டனை

இதோ இயற்கை
கொன்று குவித்திருக்கிறதே
இலட்சக்கணக்கான அப்பாவிகளை.

இதற்கென்ன தண்டனை!

சோலை மேனகா

© TamilOnline.com