சுனாமி 2004
அகிலம் அதிர்ந்தது
ஆழ்கடல் சுழன்றது
அலைச்சுவர் எழுந்தது
அசுர வேகத்தில் பாய்ந்தது.

தீவுகள் மூழ்கின
கரை கரைந்தது
மண் சரிந்தது
மக்கள் மாண்டனர்

வாழ்க்கை குலைந்தது
பயிர்கள் சிதைந்தன
குடும்பங்கள் சிதறின

இது பிரளயத்தின் முன்னோடியோ?
கேள்விகள் எழுகின்றன.

தாங்கும் தைரியத்தையும்
உதவும் மனத்தையும்
கடவுள் அருளட்டும்.

சந்தா

© TamilOnline.com