அக்டோபர் 2024: :வாசகர்கடிதம்
சமூக மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபடும் இளையோருக்கான மதிப்புமிக்க தேசிய விருதான 'தோஷி வீ நோ' என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதுமஞ்சரியைப் பற்றி ஆகஸ்ட் தென்றல் இதழில் படித்து மகிழ்ந்தோம். இதுபோன்ற நல்ல விஷயங்களைத் தருவதில் தென்றல் முதலிடம் வகிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

விஷ்ணுபுரம் விருதுகள் விவரம் அறிந்து மிகவும் மகிழ்ச்சி. இவற்றை அனைவரிடமும் சென்று அடையும் பொருட்டு வெளிக்கொணர்ந்து பாராட்டி எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் இதுபோன்ற விருதுகளைப் பற்றிய விவரங்கள் மிகவும் முக்கியம்.

சிறப்புப் பார்வை பகுதியில் தெ. ஞானசுந்தரம் அவர்கள் இந்த வயதிலும் ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகளுக்கும் எங்களின் வணக்கங்கள். தென்றலின் வித்தியாசமான மணம் நிறைந்த அத்தனை பகுதிகளும் மிக அருமை.

அன்புள்ள சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com