ஜூன் 2024: வாசகர் கடிதம்
மே மாதத் தென்றல் இதழில் சிறப்புப் பார்வை பகுதியில் சதுரங்க இளவரசன் டி. குகேஷ் அவர்களின் சாதனைகளைப் படித்தேன். "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை என் நோற்றான் கொல் எனுஞ் சொல்" என்ற வள்ளுவர் வார்த்தைகளைச் சொல்லி வாழ்த்துகிறேன். தன் மகனின் திறமையை ஊக்குவிப்பதற்குத் துணைநிற்க மருத்துவர் பணியைத் துறந்த அவரின் தந்தையாருக்கு, "தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்" என்ற வள்ளுவர் குறளைச் சொல்லி வாழ்த்துகிறேன்.

'உப்பா? பசுஞ்சாணமா?' என்ற சின்ன கதை படிக்கும்வரை, லவணம் என்றால் உப்பு என்பது உண்மையில் எங்களுக்கும் தெரியாது. வானொலி நாடக வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றிய எழுத்தாளர் துறைவன்பற்றிய விவரங்கள் அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி.

ஏப்ரல் இதழ் சிறிது தாமதமானாலும் ,மே இதழை விரைவிலேயே எங்களுக்குக் கொடுத்து, எங்களை மகிழ்வித்தீர்கள். நன்றி.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com