பாலாஜி வேத மையத்தின் பொங்கல், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
மிச்சிகனில் உள்ள பாலாஜி வேத மையத்தின் வெங்கடேசப் பெருமாள் கோவில் புத்தாண்டை முன்னிட்டு 24 மணிநேரமும் ஜனவரி முதல் நாளன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்று தரிசனம் செய்தனர். புத்தாண்டின் வரவு திருப்பாவைப் பாடல்களுடன் வரவேற்கப்பட்டது.

சிறப்பு விருந்தினரான வெங்கடேச அய்யங்கார் அவர்கள் திருப்பாவையின் மகத்துவம் குறித்துத் தமிழிலும் தெலுங்கிலும் உரையாற்றினார். அன்று வெங்கடேசப் பெருமாள் மற்றும் பத்மாவதித் தாயாருக்குக் கல்யாண மஹோத்சவமும் நடத்தப்பட்டது. அய்யங்கார் அவர்களின் சுதர்சன யக்ஞ சமிதி உலகம் முழுதிலும் 1008 சுதர்சன ஹோமங்களை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

விழாக் கமிட்டியின் சந்திரசேகர் சர்மாஜி (குருக்கள்), சம்பத் சேஷாத்ரி (தலைவர்), சுவாமிநாதன் (செயலர்), ராஜா சர்மா (பொருளாளர்), மற்றும் உறுப்பினர்களான ஸ்ரீதர் வெங்கடாச்சாரி, ரங்கராஜன் ஆகியோர் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

அரவிந்த் கே. ரமேஷ்

© TamilOnline.com