தெரியுமா?: செம்மொழி விருது
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் ஒவ்வோராண்டும் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் விருது இது. ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ், மேனாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலை ஆகியவை அடங்கிய இவ்விருது, பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இவ்விருதுக்குக் கீழ்க்கண்டோர் தேந்தெடுக்கப்பட்டு, தமிழக முதல்வரால் சமீபத்தில் சிறப்பிக்கப்பட்டனர்.

2010 – முனைவர் வீ.எஸ். இராஜம், (Former Senior Lecturer, Department of South Asia Regional Studies, University of Pennsylvania)
2011 – பேராசிரியர் பொன். கோதண்டராமன் (முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)
2012 – பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி (முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்)
2013 – பேராசிரியர் ப. மருதநாயகம் (முன்னாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், முன்னாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்)
2014 – பேராசிரியர் கு. மோகனராசு (முன்னாள் பேராசிரியர் & தலைவர், திருக்குறள் ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)
2015 - பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் (முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக்கல்லூரி)
2016 – பேராசிரியர் கா. ராஜன் (முன்னாள் பேராசிரியர், வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்)
2017 – பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், (Professor and Head of the Institute of Indology and Tamil Studies, Cologne University, Germany)
2018 – கவிஞர் ஈரோடு தமிழன்பன் (முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை)
2019 – பேராசிரியர் கு.சிவமணி (முன்னாள் முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை)

விருதாளர்களுக்கு தென்றலின் வாழ்த்துகள்.

© TamilOnline.com