திரைக்கு வருகிறது அடைக்கலம்
அன்பு தேடி அலையும் ஒருவனின் கதையை 'அடைக்கலம்' என்கிற பெயரில் தயாரித்து அளிக்கிறது கலாதாஸ் கிரியேஷனஸ் படநிறுவனம். இந்நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநாராயணதாஸ் இப்படத்தை தயாரிக்கிறார். நாயகனாக பிரசாந்த் நடிக்க நாயகியாக உமா நடிக்கிறார்.

முதன் முதலாக பிரசாந்தும், அவரது தந்தை தியாகராஜனும் இணைந்து அப்பா - மகனாக இப்படத்தில் நடிப்பது சிறப்பம்சம் ஆகும். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வருகிற டிசம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

ஆர். புவனராஜா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மதனபுரத்தை சுற்றியுள்ள இடங்களில் சுமார் 42 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

வைரமுத்துவின் பாடலுக்கு சுபேஷ்முரளி இசை அமைக்க பிரசாந்த், தியாகராஜனுடன் ராதாரவி, சரண்யா, ஜீவா மற்றும் நளினி என்று பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com