கொற்றவை: தி லெகசி
மூன்று பாகங்களாக உருவாக இருக்கும் பிரம்மாண்டமான படம் இது. 'மாயவன்', 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய சி.வி. குமார் இப்படத்தை இயக்குகிறார். வசனத்தைப் பிரபல பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளரான தமிழ்மகன் எழுதியிருக்கிறார். ராஜேஷ் கனகசபை நாயகனாக அறிமுகமாகிறார். சந்தனா ராஜ் மற்றும் சுபிக்ஷா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். உடன் இயக்குநர்கள் வேலுபிரபாகரன், கௌரவ் நாராயணன், அபிஷேக், அனுபமா குமார், பவன், வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படம் பற்றி இயக்குநர், "ஏற்கனவே நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு இப்போதும் தொடர்வது போலக் கதை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன்பும் பின்புமான காலத்துக்கு ரசிகர்களை இப்படம் அழைத்துச் சென்று பரவசத்தில் ஆழ்த்தும். முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சீரான இடைவெளியில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி, மூன்றாவது பாகத்தில் பரப்பரப்பான கிளைமேக்சுடன் கொற்றவை நிறைவடையும்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com