பார்டர்
குற்றம்-23க்குப் பிறகு இயக்குநர் அறிவழகனும் நடிகர் அருண் விஜயும் இணையும் அதிரடி ஆக்‌ஷன் படம் அருண் விஜய்க்கு ரெஜினா கசான்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல் ஆகியோர் நாயகிகள். பகவதி பெருமாள் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். இசை: சாம். சி.எஸ். இயக்கம்: அறிவழகன். "தேசபக்தி, தீவிரவாதம்னு வேறொரு கோணத்தில் படம் பயணம் போயிருக்கு. அடுக்கடுக்காக வந்து விழுகிற முடிச்சுகள், அவை அவிழ்கிற விதம்னு மக்கள் எதிர்பார்க்கிற விதத்தில் அமைஞ்சிருக்கு." என்கிறார் இயக்குநர். படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் அருண் விஜய். ரெஜினாவும் உளவுத்துறை அதிகாரிதானாம்.

அரவிந்த்

© TamilOnline.com