ராயர் பரம்பரை
காதலை வெறுப்பவன் கதாநாயகன். அவனை மூன்று பெண்கள் காதலிக்கிறார்கள். என்ன ஆனது என்பதைச் சுவைபடச் சொல்கிறது இப்படம். நாயகனாக 'கழுகு' கிருஷ்ணா நடிக்கிறார். நாயகிகளாக சரண்யா நாயர், கிருத்திகா, அனுசுலா நடிக்கின்றனர். உடன் கே.ஆர். விஜயா, கஸ்தூரி, மனோபாலா, ஆர்.என்.ஆர். மனோகர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆனந்த்ராஜ் வில்லனாக நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டி. ராம்நாத். இசை கணேஷ் ராகவேந்திரா. காதல் + நகைச்சுவை + ஆக்‌ஷன் கலந்த குடும்பப் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து. மே மாதம் வெளியாக இருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com