சேத்துமான்
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை-வசனத்தில் உருவாகும் படம் சேத்துமான். அவர் எழுதிய 'வறுகறி' கதையின் திரைவடிவம் தான் இப்படம். அறிமுக இயக்குநர் தமிழ் இயக்குகிறார். பாடல்களை யுகபாரதி மற்றும் பெருமாள் முருகன் எழுத, பிந்து மாலினி இசையமைத்துள்ளார். புனே சர்வதேசத் திரைப்பட விழா, கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது இப்படம். தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையிலான மாசற்ற அன்பைப் பேசும் இப்படத்தில் தாத்தாவாக மாணிக்கமும், பேரனாக அஷ்வினும் நடித்துள்ளனர். பா. ரஞ்சித் தயாரித்திருக்கிறார். "ஒடுக்கப்பட்டோரின் அவல வாழ்வை உயிர்ப்புடன் பேசும் படம் இது" என்கிறார் கோலிவுட் கோவிந்து. சேத்துமான் என்றால் பன்றி.

அரவிந்த்

© TamilOnline.com