குழம்பு வடகம்
தேவையான பொருட்கள்

காராமணி - 1 கிண்ணம்
துவரம் பருப்பு - 1/4 கிண்ணம்
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் வற்றல் - 6
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை

பருப்பு வகைகளை முதல்நாள் இரவே ஊற வைக்கவும்.

மறுநாள் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவற்றைச் சேர்த்து மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.

பிளாஸ்டிக் பேப்பரை வெயில்படும் இடத்தில் போட்டு, மாவைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அதில் வைக்கவும்.

2, 3 நாட்கள் நன்றாகக் காயவைத்து டப்பாவில் பத்திரப்படுத்துங்கள்.

குழம்பு, கூட்டு இவற்றில் வறுத்துப் போடலாம்.

வெங்காயம், கறிவேப்பிலை இவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டும் செய்யலாம். ஆனால் அதிக நாட்களுக்கு வைத்துக் கொள்ள முடியாது. சீக்கிரம் கெட்டுவிடும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com