பேராசை
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷின் மகன் ஸ்ரீகுமார் என்னும் ஸ்ரீ நாயகனாக அறிமுகமாகும் படம் இது. கௌஷிக் மற்றொரு நாயகன். வெண்பா, தீஷிகா, கிரிஜா கதாநாயகிகள். பூவிலங்கு மோகன் உள்ளிட்ட பலர் உடன் நடிக்கின்றனர். சங்கர் கணேஷின் உதவியாளரான வி.ஆர். ராஜேஷ் என்கிற சுதர்சன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கதை, திரைக்கதையை ஈசன் எழுத, கஜபதி வசனம் மற்றும் இணை இயக்கத்தைக் கவனிக்கிறார். இயக்கம் இ.வி.ஆர். முத்துக்குட்டி. படம் பற்றி, கோலிவுட் கோவிந்து, "வறுமைக்கு பயந்து குடிக்கு ஆளான ஒருவன், போதையில் எடுக்கும் முடிவுகளெல்லாம் அவனுக்கு எதிராகவே இருக்கின்றன. குடியிலிருந்து அவன் மீண்டானா, இல்லையா என்பதுதான் கதை" என்கிறார்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com