TNF-USA: 'மார்கழியின் மண்வாசனை'
டிசம்பர் 19, 2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 (ET) மணிக்கு (இந்திய நேரம் இரவு 9.00 மணி) தமிழ் நாடு அறக்கட்டளை 'மார்கழியில் மண்வாசனை' என்ற கருத்திலமைந்த மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை இணையம் வழியே நடத்தவிருக்கிறது. இதில் பிரபல பின்னணிப் பாடகர்களான விஜய் பிரகாஷ், எஸ்.பி. சரண், ரோஷினி ஆகியோர் பங்கேற்றுப் பாடுவார்கள். 'கல்யாண்ஸ் கோல்டன் ரிதம்' இசைக்குழு நேரடியாகப் பின்னணி இசை வழங்கும்.

$5000, $2500, $1000, $500 $100 என்று பல நிலைகளில் நன்கொடை வழங்கும் நல்வாய்ப்பு உள்ளது. இவற்றை வழங்கி உங்கள் மாவட்டத்தில் 'மண்வாசனை' திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கான கல்விச் செயல்பாடுகளை நீங்கள் ஆதரிக்க முடியும். இவற்றைத் தவிர, எந்த அளவிலும் விருப்பத்துக்கேற்ப நன்கொடை வழங்கலாம்.

நிகழ்ச்சியை இலவசமாகவும் கண்டு மகிழலாம்.

நிகழ்ச்சியை ஆன்லைனில் காண: tnfusa.org/livemusic
நன்கொடை வழங்க: tnfusa.org/donate
மேலும் தகவலுக்கு: tnfusa.org

புரவலர் ஆவதற்குத் தொடர்புகொள்க:
அண்ணாதுரை முருகேசன் - 131-461-7935
உஷா சந்திரா - 412-519-4064

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com