பிறர் தர வாரா
குழந்தைகள் கடத்தலைக் கதையாக வைத்து உருவாகியிருக்கும் படம் 'பிறர் தர வாரா'. ஏ.ஆர். காமராஜ் நடித்து இயக்கிய இப்படத்திற்கு இசை ஜாக் வாரியர். முக்கிய வேடங்களில் சம்பத்ராம், ருத்ரன், நிவேதா லோகஸ்ரீ, அபு, ஹரி, புருஷ், சேகர், ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நகரத்தில் குழந்தைகள் கடத்தல் அதிகமாகிறது. குழந்தைகளைக் கடத்துவது யார், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிய சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுகிறார். அவர் யார் இதற்குக் காரணம் என்பதைக் கண்டு பிடிக்க முயல்கிறார். புதிர் அவிழ்கிறது, ஆனால் மிகவும் அதிர வைக்கிறது. எதற்காகக் குழந்தைகளைக் கடத்துகின்றனர், அவர்களை அவர் மீட்டாரா என்பதைப் பல்வேறு திருப்பங்களுடன் சொல்கிறது இப்படம்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com