வாரிசுகள் காலம்!
இது வாரிசுகள் காலம் போலும்! நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா ஏற்கெனவே வெள்ளித்திரையில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க, தற்போது அவரது இரண்டாவது மகன் கார்த்திக்கும் திரைஉலகில் அடியெடுத்து வைக்கிறார். அது போல் சத்யராஜின் மகன் சிபு ஏற்கெனவே சில படங்களில் நடித்திருக்கிறார். நகைச்சுவை நடிகர் செந்தில் மகனும் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் பாக்யராஜ், நடிகை பூர்ணிமாவின் மகனும், மகளும் நடிக்க வந்திருக்கிறார்கள். மகள் சரண்யா நடிக்கவிருக்கும் புதிய படமொன்றை பாக்யராஜ் இயக்குகிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மூலமாக இவர்களின் மகன் சாந்தானு கதாநாயகனாக அறிமுகமாக விருக்கிறார். வளர்க வாரிசுகள் என்று வாழ்த்துவோம்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com