திடீர் காய்கறி ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
கேரட் - 1 கிண்ணம்
பட்டாணி - 1/2 கிண்ணம்
சிவப்புக் குடைமிளகாய் (நறுக்கியது) - 1 கிண்ணம்
புளிப்பு வெள்ளரி (நறுக்கியது) - 1/2 கிண்ணம்
ஹாலப்பினோ பெப்பர் - 2
இஞ்சி (நறுக்கியது) - 1/4 கிண்ணம்
வறுத்த வெந்தயப்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்ப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - 1/2 தேக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 1/2 கிண்ணம்

செய்முறை:
காய்கறிகளை நன்கு கழுவி, ஈரமில்லாமல் துடைத்து, பொடியாக நறுக்கவும். எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாகக் கலக்கவும். 2 மணி நேரம் ஊறிய பிறகு, கண்ணாடி பாட்டிலில் போட்டு உடனேயே உபயோகிக்கலாம். ஃபிரிட்ஜில் வைத்து 15 நாள்வரை உபயோகிக்கலாம். எலுமிச்சைத் துண்டுகளைச் சேர்க்கலாம். சால்சா போல் இருக்கும்.

வசுமதி கிருஷ்ணசாமி,
டெட்ராயிட், மிச்சிகன்

© TamilOnline.com