தென்றல் பேசுகிறது...
உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்.
மதம் கடந்த மனிதத்தோடு
அனைவர் நலனுக்கும் பிரார்த்தனை செய்வோம்
அன்பும் பரிவும் காட்டுவோம்.
இயற்கையை, சக மனிதர்களை, பிற உயிரினத்தை
நாம் கையாளும் முறைகளை
மறுபார்வைக்கு உட்படுத்தி
பொருள்களில் வாழ்வைத் தேடாமல்
வாழ்க்கைக்குப் பொருள் தருவோம்!

தென்றல்
ஏப்ரல் 2020

தென்றல் வாசகர்களுக்கு...
COVID-19 ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக ஏப்ரல் 2020 மாதத் தென்றல் அச்சிதழ் வெளிவராது. ஆயினும் அதன் பல வழக்கமான அம்சங்கள் இணைய இதழில் உள்ளன. வாசியுங்கள்....

© TamilOnline.com