ICMD மாநாட்டில் அனுராதா சுரேஷ்
ஜனவரி 4, 2020 அன்று பெங்களூரில் நடந்த இசை மற்றும் நடனத்துக்கான பன்னாட்டு மாநாட்டில் விரிகுடாப் பகுதியின் பிரபல இசைப்பள்ளியான ஸ்ருதி ஸ்வர லயாவின் நிறுவனர் திருமதி அனுராதா சுரேஷ் அவர்கள் பேச அழைக்கப்பட்டிருந்தார். இசைத் திறனுக்கான நாற்றங்காலாகவும் பொருளாதார வளர்ச்சிக்கான வாகனமாகவும் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றி அவர் ஆற்றிய உரை நல்ல வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சி நடுவராக டாக்டர் திருச்சி சங்கரன் அமர்ந்திருந்தார். இந்த மாநாட்டை பெங்களூரின் இந்திராநகர் சங்கீத சபா ஏற்பாடு செய்திருந்தது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com