ந்ருத்யகல்யா: 'சகியே'
அக்டோபர் 13, 2019 அன்று சன்னிவேல் நிகழ்த்துகலைகள் மையத்தில் பிரபல ந்ருத்யகல்யா டான்ஸ் கம்பெனி நிறுவனர் மற்றும் கலை இயக்குநர் குரு ஜனனி நாராயணன் அவர்கள் 'சகி - அந்தரங்கத் தோழி' என்ற கருத்தில் ஒரு தனி-நடன நிகழ்ச்சியை வழங்கினார். சமுதாயத்திலும் வாழ்க்கையிலும் எவ்வாறு நெருங்கிய நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக அமைகின்றனர் என்பதை விளக்குவதாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

"2020ம் ஆண்டு ந்ருத்யகல்யாவின் பத்தாவது ஆண்டு என்கிற சிறப்பைக் கொண்டதாகும். இதனைக் கொண்டாடும் விதமாக அடுத்த ஆண்டில் எல்லா மாணவர்களும் குழுவாகப் பங்கேற்கும் புதிய கருத்திலும் வடிவத்திலும் அமைந்த நிகழ்ச்சிகளை வழங்க ந்ருத்யகல்யா திட்டமிட்டுள்ளது" என்றார் குரு ஜனனி நாராயணன். நாட்டிய ரசிகர்கள் எப்போதும் போல இதனையும் நன்கு வரவேற்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com