கைலாசகிரி
சிலைத் திருட்டைக் கருவாகக் கொண்டு உருவாகும் படம் இது. ஆர்.கே. சுரேஷ் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மதுபாலா, சாகர், முரளி கிருஷ்னா, கண்டா சீனிவாசராவ், பூமாரெட்டி, மேகனா ஸ்ரீலட்சுமி உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர். வசனம், பாடல்களை சாய்மோகன் குமார் எழுத, கன்ஷியாம் இசையமைக்கிறார். "ஆயிரம் வருடம் பழமையானதும் அதீத சக்தி கொண்டதுமான மரகதலிங்கம் ஒன்றைத் திருடி விற்க ஒரு கும்பல் முயல்கிறது. அதைத் தடுக்க ஆர்.கே. சுரேஷ் முயல்கிறார். இவர்களுக்குள்ளான போட்டியே கதை" என்றார் இயக்குநர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com