TNF-ஆஸ்டின்: 5 கி.மீ. ஓட்டம் மற்றும் நெடுநடை
அக்டோபர் 12ம் தேதி காலையில், தமிழ்நாடு அறக்கட்டளையின் ஆஸ்டின் கிளையின் முதல் 5 கி.மீ. ஓட்டம் மற்றும் நெடுநடை Pfluger Park, Pflugerville என்ற இடத்தில் நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினர் ஃப்ளூகர்வில் மேயர் விக்டர் கோன்சாலஸ் நிகழ்வுக்குத் தலைமை தாங்குவார். பேராசிரியர் ராஜ் ரகுநாதன் (UT Austin, McComb School of Business ), 'மகிழ்ச்சியும் நிறைவும் கொண்ட வாழ்க்கை' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுவார். காயத்ரி வெங்கடேஸ்வரன் யோக வகுப்புடன் நாளைத் தொடங்கி வைப்பார். 5 கி.மீ. நிகழ்வுக்குப் பிறகு சுவையான தென்னிந்திய காலையுணவு வழங்கப்படும்.

இந்த நிகழ்வில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் உள்ளிருப்புப் பயிற்சி (Internship) செய்த இளையோரின் அனுபவங்களைக் கேட்டறியலாம். உங்கள் பிள்ளைகள் எப்படி இந்த வாய்ப்பைப் பெறலாம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் விவரங்கள்மற்றும் முன்பதிவுக்கு: walkathon-2019

மின்னஞ்சல்: austin@tnfusa.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com