அரோரா: வறியோர்க்கு உணவு
ஜூலை 28, 2019 அன்று நண்பகல் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இந்த ஆண்டின் நான்காவது 'வறியோர்க்கு உணவு' நிகழ்வை ஹெஸடு ஹவுஸ் ஏதிலர் இல்லத்தில் நடத்தின. இதில் தமிழ்ச்சிறார் சினேகா, சுமித்ரா, ரத்திக், மித்துன், நெட்சு, விசயாதித்தன் ஆகியோருடன் திருவாட்டியர் லதாசிரீ, யாமினி, திருவாளர்கள் கணேசன், தீபக் மற்றும் பாபு ஆகியோர் பங்கேற்றுத் தொண்டாற்றினர்.

திருக்குறள் அதிகாரங்கள் நான்கின் விளக்கமும், தமிழர்பெருமையைக் கூறிச் சென்ற பழம்பெரும் வெளிநாட்டறிஞர்களின் சிறப்புரைகள் அடங்கிய சிறு தொகுப்பும் இல்லத்தோருக்கு அளிக்கப்பட்டன.

தமிழ் மாணக்கர்களும், அவர்தம் பெற்றோரும் நன்றி கூறி நிகழ்ச்சியை முடித்தனர்.

வ.ச. பாபு,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com