ஸ்ருதி ஸ்வர லயா: 22ஆம் ஆண்டுவிழா
ஆகஸ்ட் 18, 2019 அன்று விரிகுடாப்பகுதியின் ஃப்ரீமான்ட்டில் கலைகளைப் பயிற்றுவித்து வரும் ஸ்ருதி ஸ்வரலயா தனது 22வது ஆண்டுவிழாவைச் சிறப்புறக் கொண்டாடியது. இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. வரவேற்புரை வழங்கிய திருமதி அனு சுரேஷ், திருமதி அம்பா ராகவன் அனுப்பிய வாழ்த்துரையை வாசித்தார். முதுநிலை மாணவியர் கிரிஜா பிரபு மற்றும் காயத்ரி கணேசன் ஆகியோரின் தனி நடனம் அடுத்து வந்தது. இந்திய சுதந்திரநாளை ஒட்டி அவர்கள் தேசபக்திக் கருத்துக் கொண்ட பாடல்களை வழங்கினர். அனுராதா சுரேஷ் அவர்கள் வழங்கிய சிறிய நிகழ்ச்சியுடன் விழா நிறைவெய்தியது. பங்கேற்றோருக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஐஸ்வர்யா,
ஃப்ரீமான் ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com