சாக்ரமென்டோ தமிழ் மன்றம்: தமிழ்ப்புத்தாண்டு
மே 4, 2019 அன்று கலிஃபோர்னியா மாநிலத் தலைநகரான சாக்ரமென்டோவிலுள்ள ஃபோல்சொம் மேனிலைப்பள்ளியில் சாக்ரமென்டோ தமிழ் மன்றம் தமிழ்ப் புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாடியது. அதில் பழம்பெரும் தமிழ்ப் புலவர்களை நினைவூட்டும் வகையில் பாரதியார், திருவள்ளுவர், ஔவையார் என வேடமிட்டுச் சிறார்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் துவக்கினர்.

பின்னர், பரதநாட்டியம், கோலாட்டம், சிறுவர் பட்டிமன்றம், பாரதியார் பாடல்கள், வில்லுப்பாட்டு, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் , கும்மி, சிலம்பாட்டம், காவடியாட்டம் யாவும் நடைபெற்றன. இவற்றில் சிறுவர்கள் மட்டுமின்றிப் பெரியவர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றனர். இயற்கை உணவு, மரம் வளர்த்தல் ஆகியவை பற்றி எடுத்துரைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நம் தமிழர் பண்பாடுகளைக் குறித்த வினா-விடை போட்டியும் நடைபெற்றது.

சந்தியா,
சாக்ரமென்டோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com