நளினகாந்தி


கஸ்தூரி நாயகியாக நடிக்கும் படம் இது. படத்தில் நாயகன் என்று தனியாக யாரும் இல்லை. வ.ஐ.ச. ஜெயபாலன், புவிஷா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பொன். சுகீர் இயக்குகிறார். " ஜெயபாலன் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர். அவருக்கு மனநோய் ஏற்படுகிறது. அவருடைய நர்ஸான புவிஷா, அவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட கஸ்தூரி இருவரும் அவரை எப்படி மனநோயில் இருந்து மீட்கின்றனர் என்பதுதான் கதை. நளினகாந்தி என்னும் ராகம், மனநோயில் இருந்து மீட்கும் சக்தி கொண்டது என்பதால் இதையே தலைப்பாக வைத்தோம்" என்கிறார் இயக்குநர். இசை: ஜூட் ஆரோகணம்.

அரவிந்த்

© TamilOnline.com