கதை பழசு; படம் புதுசு!
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதை விளக்கும் 'நான்கு எருதுகளும்; ஒரு சிங்கமும்' கதையை அடிப்படையாகக் கொண்டு ஆன் லைட்ஸ் மூவி எண்டர்டெய்னர்ஸ் சார்பில் கதிர் 'கொட்டாரம் தாலுக்கா, திருநெல்வேலி ஜில்லா' என்ற பெயரில் தயாரிக்கிறார்.

புதுமுகம் ஆனந்த் நாயகனாக நடிக்கவிருக்கிறார். நாயகியாக மும்பை மாடலிங் ரேவதி சர்மா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தரா, சத்யபிரகா ஆகிய இருவரும் வில்லனாக நடிக்கவிருக்கின்றனர். மனிதநேயத்திற்கும், சட்டத்துக்கும் இடையே நடக்கும் மோதலே கதையாகும். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொட்டாரம் என்ற ஊரில் கதை சம்பவங்கள் நடைபெறுவதாக படத்தில காட்டப்படவிருக்கிறது.

முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் முத்துக்காளை. கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார் கண்ணன். பரணி இசையை கவனிக்கிறார். வரும் நாட்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com