சான்ட கிளாரா: மஹாபெரியவர் ஆராதனை
டிசம்பர் 28 முதல் ஜனவரி 1 வரை மஹாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 25வது ஆராதனை விழாவைக் காமாக்ஷி சமூக மையம் (சான்ட கிளாரா, கலிஃபோர்னியா) சிறப்பாக நடத்தியது. விசேட பூஜைகள் மற்றும் மஹாபெரியவர் கனகாபிஷேக ஆராதனைகளை ஸ்ரீ சந்திரமௌலி நாராயண சாஸ்திரிகள் தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்.

டிசம்பர் 28 அன்று கணபதி ஹோமம், காமாக்ஷி அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. டிசம்பர் 29 அன்று மஹான்யாசமும் ஏகாதச வர ருத்ர அபிஷேகமும் நடைபெற்றன. ஜனவரி 1ம் தேதி மஹாபெரியவர் கனகாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனை அடுத்து மகாபெரியவர் திருவீதி உலா மேளதாளம் முழங்க விமரிசையாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி 27, 2019 அன்று ஸ்ரீ மஹாபெரியவர் சங்கீத ஆராதனை நிகழ்ச்சி நடந்தேறியது.

ராஜேஸ்வரி ஜெயராமன்,
சான்ட கிளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com