வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் கிறிஸ்துமஸ் விருந்து
டிசம்பர் 16, 2018 ஞாயிறன்று மாலை, வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் டப்ளின் பகுதியில், கிறிஸ்துமஸ் விருந்தொன்றைச் சிறப்பாக நடத்தியது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவில், மன்றச் செயலாளர் திரு. ரமேஷ் குப்புசாமி வரவேற்புரை ஆற்றினார். தமிழ் மன்ற இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி அரங்கத்தில் விழாக்கால குதூகலத்தை நிறைத்தது. விழாவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளர்கள் பங்கேற்றனர். நடன நிகழ்ச்சிகளும் குழந்தைகள் பாடிய சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களும் அனைவரையும் கவர்ந்தன.

நிகழ்ச்சியைத் திரு. ராமன் மற்றும் திரு. யோகானந்த் சிறப்பாகத் தொகுத்து வழங்கினர். நன்றி நவிலலுடன் விழா நிறைவெய்தியது.

© TamilOnline.com