டாலஸ்: மொய் விருந்து நிதி திரட்டல்
டிசம்பர் 16, 2018 அன்று, டாலஸ் தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ் மலரும் மையத்தின் வழியாக, ஃப்ரிஸ்கோ ஃப்ளையர்ஸ் வளாகத்தில் 'மொய் விருந்து' ஒன்றை நடத்தி, கஜா புயல் நிவாரண நிதி திரட்டினர். 130 குடும்பங்கள் தத்தமது வீட்டிலிருந்து உணவு தயாரித்து எடுத்து வந்து 700 பேருக்குத் தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வாழை இலையில் விருந்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட தொகையைக் கொண்டு புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தென்னை மற்றும் பலாக் கன்றுகள், எலுமிச்சை நாற்றுகள் வழங்கவும், வீடிழந்தோருக்கு வீடு கட்டிக் கொடுக்கவும் உள்ளனர். தமிழ் மலரும் மையத்தின் சார்பில் ஜெய் நடேசன், கீதா சுரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் மொய் விருந்து ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.

நார்த் கரோலினாவைச் சேர்ந்த வாகை மகளிர் அமைப்பு, டாலஸ் தமிழ் மலரும் மையம் மற்றும் யுனைடட் தமிழ் அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்பைச் சேர்ந்தவர்களும் இணைந்து 25,000 டாலர் தொகையைக் கஜா புயல் நிவாரண நிதியாகத் தமிழ்நாடு அறக்கட்டளையிடம் (TNF) வழங்கினார்கள்.

முனைவர். சித்ரா மகேஷ்,
TNF தொண்டர், டாலஸ்

© TamilOnline.com