கொலையுதிர் காலம்


மேற்கண்ட தலைப்பில் சுஜாதா ஒரு நாவலை எழுதியிருந்தார். அது தொலைகாட்சித் தொடராகவும் வெளியானது. அதே தலைப்பு என்றாலும் சுஜாதாவின் கதைக்கும் இப்படத்திற்கும் தொடர்பில்லை. படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பூமிகா சாவ்லா நடிக்கிறார். யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்துத் தயாரிக்கும் இப்படத்தை 'உன்னைப்போல் ஒருவன்', 'பில்லா 2' படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கியிருக்கிறார். மர்மம் + திகில் கலந்து உருவாகியுள்ள இந்தப்படம் ஜனவரியில் திரைக்கு வரும்.

அரவிந்த்

© TamilOnline.com