ஆன்மிகம், ஆண்டவன், ஆண்டிராய்டு
"இன்னிக்கு உங்க பொறந்த நாளு. ஆஃபீஸுக்கு போகும்போது கோயிலுக்குப் போயிட்டுப் போங்க" என்று நிகிலா சொன்னது நினைவுக்கு வர, நேராகக் கோயிலை நோக்கி வண்டியை விட்டான்.

உள்ளே நுழைய முடியாத அளவுக்குப் பெருங்கூட்டம்! கண்ணாடி வழியாக அனுமாரை ஆண்டிராய்டில் படம் பிடித்துக்கொண்டு அவசரமாகக் கிளம்பினான்.

அனுமார் படத்தோடு "Leaving the temple now" என்று வந்த குறுஞ்செய்தியைப் பார்த்து மகிழ்ந்தாள் நிகிலா.

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com