ஆறிலிருந்து 6 வரை


இதன் நாயகன் கராத்தே கௌசிக். நாயகி. குஷ்பு சிங். ஜெயபிரகாஷ், ஜார்ஜ், சாமி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நிகழும் சம்பவங்களின் தொகுப்புதான் படம். பெண்களைப் பாலியல் கொடுமை செய்ய நினைப்பவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, இசை அமைக்கிறார் பெண் இசை அமைப்பாளர் ஜீவாவர்ஷினி. கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் ஸ்ரீஹரி. "ஓர் இளம்பெண் பாலியல் ரீதியில் எதிர்கொள்ளும் தொல்லைகளை எவ்வாறு கையாள்கிறாள் என்பதுதான் படம். நாயகனின் கபட உள்ளத்தை அறியாமல் அவள் பழகுகிறாள். அவளை அனுபவித்துவிடும் எண்ணத்துடன் ஒருநாள் நாயகியின் வீட்டுக்குச் செல்கிறான் நாயகன். அங்கு அவன் காணும் காட்சி அவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. அவனால் அவளை நெருங்க முடிந்ததா என்பதைத் திகில் கலந்து சொல்லியிருக்கிறோம்" என்கிறார் ஸ்ரீஹரி.

அரவிந்த்

© TamilOnline.com