அக்டோபர் 2018: வாசகர் கடிதம்
கற்பனைச் சிறகடித்து - களிப்பினில்
ஆழ்த்தும் கவிதை
உள் நெக்கு நெஞ்சுருகி - கண்ணீரில்
கசியவைக்கும் கதைகள்
சிரிப்பினில் ஆழ்த்தும் தேவனின் சாம்பு
இன்னும் சொல்லொணா எழுத்தோவியங்கள்
கொண்டு மிளிரும் தென்றல்!

S. நாராயணஸ்வாமி, சிகாகோ

*****


ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் பற்றிய கட்டுரை அவருடைய மேதா விலாசத்தையும், ஆழ்ந்த சங்கீத அறிவையும் பறைசாற்றியது. அவருடைய பாடல்களை அறிந்திருந்தாலும் அவரைப்பற்றி அறிய உதவியதற்கு நன்றி. ஒரு துப்பறியும் தொடர் படிப்பதைவிட அதிக விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கிறது வ.வே.சு. ஐயரின் வாழ்க்கை.

அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு அழகான தமிழ்ச் சொற்களைத் தென்றலில் படித்து மகிழ்கிறேன். மகிழ்வதோடு மட்டுமின்றி அந்த வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொண்டு எங்கள் தமிழ்ப் பள்ளியிலும் பயன்படுத்தப் போகிறேன். உதாரணமாக நெடுநடை, தொடுதிரை போன்றவை. வாழ்க உங்கள் தமிழ்ப்பணி!

வித்யாலஷ்மி,
சிமி வேலி, கலிஃபோர்னியா

© TamilOnline.com