விரிகுடாப்பகுதி: கலைஞர் கருணாநிதி இரங்கல் கூட்டம்
ஆகஸ்டு 18, 2018 அன்று மாலை 4 மணியளவில் வார்ம்ஸ்பிரிங்ஸ் கம்யூனிட்டி சென்டரில் விரிகுடாப்பகுதி தமிழ் உடன்பிறப்புகள் சார்பாக அண்மையில் மறைவுற்ற மேனாள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் திரு குமார் நல்லுசாமி இரங்கல் தீர்மானம் வாசித்தார். இரண்டு நிமிட மவுன அஞ்சலிக்குப் பின், கலைஞர் படத்தினை திறந்து வைத்து, நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. திரு கோவிந்த் கோபால் தொகுத்து வழங்கினார்.

இறுதியாக தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் ஆலந்தூர் க. ஒப்பிலாமணி இரங்கல் உரை நிகழ்த்தினார். மேலும் பலர் கலைஞரின் சிறப்பு குறித்துக் கவிதைகள் மற்றும் உரை வழங்கினர். திருமிகு கேசவன் விஸ்வநாதன், ஆப்பகடை காளிதாஸ், நைஸ் நிலாமுதீன், ஜெயா பாண்டே, டெய்சி ஜெயப்பிரகாஷ், எழில்வாணன் மற்றும் தன்னார்வலர்கள் சுபா ராஜேஷ், மருதுபாண்டி, சிவா பக்தவச்சலம் ஆகியோர் பங்கேற்றனர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com