தில்லை நாட்டியப் பள்ளி: ஆண்டுவிழா
ஏப்ரல் 29, 2018 அன்று, ஸ்ரீ தில்லை நாட்டியப் பள்ளியின் முதலாவது ஆண்டுவிழா மில்பிடாஸ் நூலகக் கலையரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது. திரு அமிதேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். பள்ளியின் குருவான திருமதி ஸ்ரீதேவி ஜெயராமனின் ஆசியுடன் விழா துவங்கியது. முதலாவதாக இஞ்சிக்குடி சுப்பிரமணியன் கம்பீரநாட்டை ராகத்தில் இயற்றிய மல்லாரி பாடலுக்கு மாணவியர்கள் நடனம் புரிந்தனர். அடுத்ததாகப் புஷ்பாஞ்சலி, கணேச கவுத்துவம், ஆண்டாள் கவுத்துவம், ஆனந்த நர்த்தன கணபதி, நடேச கவுத்துவம் மற்றும் "அலருலு குரியக" போன்ற பாடல்களுக்கு மாணவியர் அற்புத அபிநயத்துடன் நடனமாடினர். பிருந்தாவனி மற்றும் ஹிந்தோள ராகத் தில்லானாவுடன் விழா நிறைவடைந்தது.

இந்த நடனப்பள்ளியில் சிறுமியர் மட்டுமல்லாது சில சிறுமியரின் பெற்றோர்களும் மாணவியராக இருப்பது ஒரு சிறப்பம்சம். அமிதேஷ் குமார் நன்றியுரையாற்றினார்.

இராஜேஷ்குமார்,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com