வேதாந்த வித்யா பீடம்: ஆண்டுவிழா
மே 12, 2018 அன்று வேதாந்த வித்யா பீடத்தின் எட்டாம் ஆண்டு விழா சன்னிவேலில் சிறப்பாக நடைபெற்றது. 3 வயதிலிருந்து 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இதில் நிகழ்ச்சிகளை வழங்கினர்.

இளஞ்சிறார் பக்தியுடன் சிவன், விஷ்ணு , சரஸ்வதி மற்றும் ஹனுமான் சுலோகங்களைக் கூறியது மனதை உருக்கியது. மூத்த மாணவர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் திருப்பாவை பாடினார்கள்.

இசை மாணவர்கள் இனிய பஜனைப் பாடல்களை பாடினர். பீடத்தின் இணைநிறுவனர் திரு பார்த்தசாரதி மாணவர்களுக்குப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். குரு திருமதி புவனா ஐயர் குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அளித்தார்.

வேதாந்த வித்யா பீடம் 8 வருடங்களுக்கு முன் குழந்தைகளுக்கு பக்தியையும் சுலோகங்களையும் போதிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

பீடம் தனது மதிப்புக் கல்வித் திட்டத்தின் வழியாக நீதிபோதனையையும் வாழ்நெறியையும் குழந்தைகளுக்குக் கற்பிப்பதில் முக்கியப்பங்கு அளித்துவருகிறது.

மேலும் விவரங்களுக்கு: www.vedantapeetam.org

ராஜேஸ்வரி ஜெயராமன்,
சான்ட கிளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com