பரியேறும் பெருமாள்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது 'பரியேறும் பெருமாள்'. கதிர் கதாநாயகன். ஆனந்தி கதாநாயகி. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எழுத்தாளர் மாரி செல்வராஜ் படத்தின் கதையை எழுதி இயக்குகிறார். உயிர்ப்புள்ள ஒரு கிராமத்தையும் அதன் மனிதர்களையும் நீண்ட நாளைக்குப் பின் திரையில் பார்க்கலாம் என்கிறார் கோலிவுட் கோவிந்து.



அரவிந்த்

© TamilOnline.com