சிகாகோ: தங்கமுருகன் விழா
ஏப்ரல் மாதம் 28, 2018 சனிக்கிழமை அன்று வருடாந்திரத் தங்கமுருகன் விழா, இல்லினாயில் அமைந்துள்ள லெமான்ட் பெருநகர் இந்துக் கோவிலில் நடைபெற உள்ளது. அமெரிக்க-இந்தியரிடையே மதச் சம்பிரதாயங்களில் தேர்ந்த வித்துவானாகக் கருதப்படும் திரு. தங்கம் பட்டர் தலைமை தாங்கி இதனை நடத்தவுள்ளார். 1008 சிவாலயங்களுக்குக் கும்பாபிஷேகம் நடத்தியதற்காகத் திருமுருக. கிருபானந்தவாரியார் சுவாமிகளால் 'சிவபிரதிஷ்டா பாஸ்கர' பட்டம் சூட்டப்பெற்றவர் இவர். பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் (ஆகமங்களில்) தந்துள்ளது.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக திரிவேணி ஆர்ட்ஸ் வழங்கும் 'அருணகிரிநாதர்' நாடகம் நடைபெறும். பலவகை கலைநிகழ்ச்சிகளும் உண்டு.

புவனேஸ்வரி பட்டர்,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com