மார்ச் 2017: வாசகர் கடிதம்
பிப்ரவரி மாதத் தென்றல் இதழில் டாக்டர் பாலா சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல் சிறப்பாக இருந்தது. இளம் சிறுவர்களுக்கு அமெரிக்க மண்ணில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதற்கேற்ப தமிழில் ஆர்வம் உண்டாக்குவது, தமிழ் கலாசாரம் உலக அளவில் பரவ வள்ளுவரின் குறளை இளைய தலைமுறையினர் அறியச் செய்வது என்னும் அவரது தமிழ்த் தொண்டு பாராட்டத்தக்கது. பிரபா-டாக்டர் பாலா சுவாமிநாதன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com